×

தமிழ்நாட்டில் 5நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 5நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், மிகக் கடுமையான வெப்ப அலை வீசும் என்பதால் இந்திய வானிலை மையம் அம்மாநிலங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என வானிலை மையம் கூறியுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமகா நேற்று மேற்கு வங்க மாநிலம் கலைகுண்டாவில் 114 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மே 2,3,4, ஆகிய நாட்களில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 5நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Indian Meteorological Centre ,Chennai ,Indian Meteorological Survey ,
× RELATED தமிழகத்தில் 5 நாட்களுக்கு...